மின் கட்டண உயர்வு குறித்து கருத்துக்களை தெரிவிக்க மின் நுகர்வோர்களுக்கு 30 நாட்கள் அவகாசம்.!

0 1513

மின் கட்டண உயர்வு குறித்து கருத்துக்களை தெரிவிக்க மின் நுகர்வோர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக நேற்று அறிவித்த மின்சாரத்துறை அமைச்சர், கட்டண விபரங்கள் ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறினார்.

இந்நிலையில், அந்த விபரங்கள் மின்வாரிய இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் அதனடிப்படையில் மின் நுகர்வோர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments