நள்ளிரவில் காரில் சென்ற ரியல் எஸ்டேட் புரோக்கரை குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்..

0 2604
நாமக்கல் அருகே, நள்ளிரவில் காரில் சென்ற ரியல் எஸ்டேட் புரோக்கரை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் அருகே, நள்ளிரவில் காரில் சென்ற ரியல் எஸ்டேட் புரோக்கரை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் புரோக்கரான குமரேசன், நேற்றிரவு எம்.ஜி.ஆர் நகர் அருகே டாஸ்மாக்கில் நண்பர்களுடன் மது அருந்துவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்.

குமரேசனே காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நிலையில், நள்ளிரவில் திருச்சி சாலையில் கழுத்தில் கத்திக் குத்துக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் காரில் அவர் உயிருக்கு போராடியதைக் கண்ட பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குமரேசனை காரில் பின் தொடர்ந்த வந்து மர்ம நபர்கள் கொலை செய்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments