கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் செய்து புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது!

0 1075

ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் மதன பள்ளியில் கலர் ஜெராக்ஸ் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் பிரிண்டிங் மெஷினையும் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சித்தூர் மற்றும் அன்னமய்யா ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் சந்தைகளில் கள்ள நோட்டுகளை அவர்கள் தொடர்ந்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments