கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேரில் ஒருவர் மீட்பு.. மூவரை தேடும் பணிகள் தீவிரம்!

0 1130

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேரில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மதகு சாலை என்ற இடத்தில் மீன்பிடிக்கச் சென்ற மனோஜ், ஆகாஷ் ,அப்பு, கொளஞ்சி ஆகிய 4 பேர், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர்.

இதில் கொளஞ்சி என்ற நபரை மீட்புக் குழுவினர் போராடி மீட்ட நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்று பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால், மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments