மது அருந்துவதில் ஏற்பட்டத் தகராறு - நள்ளிரவில் இருதரப்பினரிடையே மோதல்

0 1631

சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் மது அருந்துவது தொடர்பான தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பூம்புகார் நகரைச் சேர்ந்த செல்வ பாலாஜி தனது நண்பர்களுடன் மது அருந்திய போது, அவ்வழியே தனது நண்பர்களுடன் வந்த புவன் என்பவர் அவர்களிடம் மதுபானம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பும் கத்திகளால் வெட்டிக்கொண்ட நிலையில் சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடிவந்துள்ளனர்.

இதில் பொது மக்களை மிரட்டும் விதமாக சாலைகளிலிருந்த  வாகனங்களை கத்திகளால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார்கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments