தமிழ்நாட்டில் மின் கட்டணம் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி.!

0 2570

தமிழ்நாட்டில் மின் கட்டணம் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் உயருமென்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அவர், இரு மாதங்களுக்கு இருநூறு யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27 ரூபாய் 50 காசுகளும், 301 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு 147 ரூபாய் 50 காசுகளும் உயர்த்த பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments