மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.33 லட்சம் கனஅடி வீதம் நீர் திறப்பு

0 4397
கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், அந்த அணைக்கு தொடர்ந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் குளிக்கவோ ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments