வனப்பகுதி குளத்தில் தவறி விழுந்த 6 யானைகள்.. குளக்கரையில் குழி தோண்டி மீட்ட வன ஊழியர்கள்.!
அசாம் மாநிலம் லக்கிபூரில் வனப் பகுதியில், குளத்தில் தவறி விழுந்து தத்தளித்த 6 யானைகளை வனத்துறையினர் மீட்டனர்.
வனப்பகுதியில் விலங்களுக்காக வெட்டப்பட்ட குளத்தில் 6 யானைகள் தவறி விழுந்தன. கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்த யானைக் குட்டிகளை மீட்கும் முயற்சியில் கோல்பரா வனத்துறையினர் ஈடுபட்டனர்.
குளத்தின் பக்கவாட்டு பகுதியில் குழி தோண்டி யானைகள் வெளியே வரக் கூடிய வகையில் பாதை அமைத்து பத்திரமாக மீட்டனர்.
Comments