இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகளிடையே இன்று பேச்சுவார்த்தை..!

0 1215

கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில், படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக சீன ராணுவத் தளபதிகளுடன் இந்திய ராணுவ தளபதிகள் இன்று காலை 9.30 மணிக்குப் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர்.

இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 15-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியாவுக்கு சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்திய ராணுவத்தின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென் குப்தா இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார்.

சீனா பான்காங் ஏரிமீது கட்டி வரும் புதிய பாலம் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்தியா இப்பேச்சுவார்த்தையின் போது எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments