சாக்கடையில் மிதந்த ரூபாய் நோட்டுக்கள்..! கைவிட்டு எடுத்தவருக்கு அதிர்ச்சி..!

0 207947

இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் தூத்துக்குடி கழிவுநீர்க் கால்வாயில் மிதந்து வந்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள சிவன் கோயில் தேரடி வீதி பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த கழிவுநீர் ஓடையில் சம்பவத்தன்று திடீரென 2000, 200, 100, 50, ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றாக மிதந்து வந்தன.

அந்தப் பகுதியில் நின்று கொண்டவர்கள் மிகுந்த ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். கழிவுநீர் ஓடையில் கையை விட்டு பணத்தை எப்படி எடுப்பது என்று சிலர் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் வேகமாக முன்னேறி கையை விட்டு 200 ரூபாய் 50 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்துப் பார்த்தார்.

அவர் முகத்தில் அவ்வளவு பிரகாசமான மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு நோட்டாக எடுத்து பார்த்த அவருக்கு அது சிறு குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் என தெரிய வந்ததும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments