"குடியரசுத்தலைவர் தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும்" - அம்பேத்கர் பேரன்

0 4425
"குடியரசுத்தலைவர் தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும்" - அம்பேத்கர் பேரன்

குடியரசுத்தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக பெரும்பாலான கட்சிகளை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளதால், குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை யஷ்வந்த் சின்ஹா திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சிவசேனா அறிவித்துள்ளதால், தமது மும்பை பயணத்தை யஷ்வந்த் சின்ஹா ரத்து செய்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments