சர்வீஸ் சென்டரில் இருந்த புல்லட் பைக்கை திருடிச் சென்ற நபர்.. பெட்ரோல் பங்கிலும் பணம் தராமல் பெட்ரோல் போட்டுவிட்டு தப்பியோட்டம்..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சர்வீஸ் சென்டரில் இருந்த புல்லட் பைக்கை திருடிய நபர், பெட்ரோல் பங்கிலும் பணம் தராமல் பெட்ரோல் போட்டுவிட்டு தப்பியோடிய சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
காந்திநகர் பகுதியில் உள்ள ராயல் என்பீல்டு சர்வீஸ் சென்டரின் வெளியே, வாட்டர் வாஷ் செய்யப்பட்டு சாவியுடன் நிறுத்தபட்டிருந்த புல்லட் பைக்கை யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு இளைஞர் திருடிச்சென்றார்.
அதன்பின் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அதே பைக்கில் சென்ற இளைஞர் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, எடிஏம் கார்டு தேய்க்கும் இயந்திரம் உள்ளதா என கேட்டு பணியாளரை திசை திருப்பி, பணம் தராமல் தப்பியோடினார். புகாரின் பேரில் இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments