கடன் தொல்லையால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு.!

0 2732

கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட ஆயுதப்படைக் காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறுகிறது. நேற்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகரைச் சேர்ந்த காளிமுத்து என்ற ஆயுதப்படை காவலர், திடீரென துப்பாக்கியை வைத்து வயிற்றுப் பகுதியில் சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அருகிலிருந்த மற்ற காவலர்கள் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்றிரவு காளிமுத்து உயிரிழந்தார். கடன் தொல்லையால் காவலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments