40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது.!

0 1633

தமிழகம், கேரள பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் விடுமுறை நாட்களில் காலியாக உள்ள வீடுகளாய் பார்த்து கைவரிசை காட்டி வந்த நபரை போலீசார் தேடி வந்தனர். கொள்ளை நடந்த இடங்களில் பொதுவாக ஒரு வெள்ளை நிற ஆக்டிவா வாகனம் கடந்து செல்வதை நோட்டமிட்ட போலீசார், ஊருக்குள் அதே வாகனத்தில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

பிடிபட்டவர் ஸ்டீபன் என்றும் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. 55 சவரன் நகையை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments