தாலியை கழட்டி வைத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு உயர் நீதிமன்றம் அட்வைஸ்..! மருத்துவருக்கு கிடைத்தது விவாகரத்து

0 31319

விவாகரத்துக்கு முன்பாக கணவரை பிரிந்த மனைவி, தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல் எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர், வேறொரு பெண்ணுடன் தமக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அரசு ஆசிரியரான தனது மனைவி, மனரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரியும் கணவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் சவுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பணியிடத்துக்கு சென்று கணவரைப் பற்றி அவதூறு பரப்பியது மனரீதியில் துன்புறுத்துவதற்கு சமம் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையின் போது, விவாகரத்துக்கு முன்பாக கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என கூறி, கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில் அவரை பிரிந்ததும், தாலிச் சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments