சென்னை சென்ட்ரலில் பயணிகளின் செல்போன்களை தொடர்ந்து திருடி வந்த 3 வடமாநில இளைஞர்கள் கைது.!

0 1402

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளின் செல்போன்களை தொடர்ந்து திருடி வந்த 3 வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் கைது செய்தனர்.

பயணிகளின் செல்போன் உள்ளிட்டவை தொடர்ந்து திருட்டு போவதாக எழுந்த புகாரின் பேரில் சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்த போது, 3 பேர் சார்ஜ் போடுவது போல சென்று அங்கு சார்ஜ் போடப்பட்டிருக்கும் செல்போன்களை திருடியது தெரியவந்தது.

நேற்றிரவு மீண்டும் திருட வந்த 3 இளைஞர்களையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான மூவரும் ரயில் நிலையத்திலேயே தங்கி, இரவு நேரத்தில் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று செல்போன்களை திருடியதும், அதனை விற்று அந்த பணத்தை கஞ்சா வாங்க பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments