"ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை அடையாளம் காண குழு" - உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1264
தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை அடையாளம் கண்டு அவற்றின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அர்ச்சகர்கள் நியமனத்தை பொறுத்தவரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆகம விதிகளின் படியே நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments