புதிதாக கட்டுப்பட்டு வந்த குடோனின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு.!
டெல்லி அலிப்பூரில் புதிதாக கட்டுப்பட்டு வந்த குடோனின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் 9 பேர் மீட்கப்பட்ட நிலையில், இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5000 சதுர மீட்டரில் கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவரின் கட்டிடம் உறுதித்தன்மை இல்லாததால் இடிந்து விழுந்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments