பிரதமர் மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் - 6 பேரிடம் தீவிர விசாரணை..!

0 1693
பிரதமர் மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் - 6 பேரிடம் தீவிர விசாரணை..!

கடந்த 12 ஆம் தேதி பாட்னா சென்ற பிரதமர் மோடியை குறிவைத்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தீவிரவாத செயல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியதாகவும் பீகார் போலீசார் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாட்னா வந்த பிரதமர் மோடியை குறிவைத்தது அம்பலமாகியுள்ளது.

உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து கத்திகளையும் வாள்களையும் பயன்படுத்தி மதக்கலவரத்தை தூண்ட பயிற்சி அளித்து வந்ததாகவும் அந்த ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments