கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

0 1266

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments