கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த மாணவனுக்கு கட்டணம் செலுத்திய முதலமைச்சர்

0 10783

தனியார் கலை கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல், அரசு கல்லூரியில் இடம் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர் நவீன் குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே கல்விக்கட்டணம் செலுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று அந்த மாணவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர், அவரது பெற்றோரிடமும் பேசி நலம் விசாரித்தார். மாணவரின் பெற்றோர் நோய்வாய்பட்டு இருப்பதை அறிந்துக்கொண்ட முதலமைச்சர், அவர்கள் கோரிக்கை விடுத்தப்படி, மளிகைக்கடை வைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். முதல்வரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உதவியது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments