இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா

0 1559

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு அவர் சென்றடைந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு தனது பதவி விலகல் கடிதத்தை கோத்தபய ராஜபக்சே அனுப்பி வைத்துள்ளார்.

சிங்கப்பூரில் துணிக்கடையில் கோத்தபய இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனிடையே இலங்கையில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறியதிலோ அல்லது அவரது பயணத்திலோ, இந்திய தூதரகத்தின் பங்களிப்பு எதுவும் இல்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments