மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் வேகமெடுக்கிறது

0 965

மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் பேசிய அவர் இதனை கூறினார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்காக மராட்டியத்தில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக உரிய அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

தற்போது அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதால் திட்டப் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments