வீட்டுக்குள் பூட்டிவிட்டு வாக்கிங் சென்ற தாய்.. அடுக்குமாடி குடியிருப்பின் 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை பலி..!

0 2209

திருவள்ளூர் மாவட்டம் கரையான்சாவடியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 5ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மூன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் தாய் சிந்தியா, மகள் வின்சி ஆதித்தியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். திடீரென விழித்த குழந்தை வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அழுதபடி, பால்கனி கதவை திறந்து அங்கிருந்த சேரின் மேல் ஏறி நின்று எட்டிப்பார்த்துள்ளது. அப்போது கால் தவறி அந்த குழந்தை 5 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.

குழந்தை ஆதித்தி ரோட்டில் கிடப்பதை கண்ட காவலாளி உடனே பெற்றோருக்கு தகவல் கொடுக்க,  குழந்தையின் உடலில் காயங்கள் இல்லாததால் குழந்தை மயக்கம் அடைந்துள்ளதாக நினைத்த பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போதுதான் குழந்தை ஆதித்தி 5ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments