மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி..!

0 5155

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு இன்று சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில், 10% நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சருக்கு, கொரோனா தொற்று அறிகுறிகள் தொடர்பான சிகிச்சை அளிப்பதாகவும், அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்திற்கு பிறகே முதலமைச்சர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments