நாளை முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் - மத்திய அரசு

0 1759

நாட்டின் 75-வது சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு, நாளை முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜூலை 15-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்திய மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர் முதல் தவணையும், 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 18-59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments