அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வழக்கில் இன்று விசாரணை

0 1400

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்  கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த தனித் தனி மனுக்கள்  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

சீல் வைத்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை  ஒப்படைக்கக் கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும், சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த இரு வழக்குகளும் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments