இமாச்சல பிரதேசத்தில் கனமழை: கரை புரண்டோடும் பெருவெள்ளம்.. மூழ்கிய அரசுப் பேருந்துகள்..!

0 1094

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கரை புரண்டோடும் பெருவெள்ளத்தில், மணாலி பேருந்து நிலையத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள் மூழ்கின.

தொடர் மழையால் சிம்லா, மணாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.

மணாலியில் நிலச்சரிவோடு பெருவெள்ளம் கரை புரண்டோடும் நிலையில், மலைச்சாலையை ஒட்டி நிறுத்தப்பட்ட பேருந்துகளின் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து வெள்ளம் உட்புகுந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments