இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களை திருட பாகிஸ்தான் திட்டம் - உளவுத்துறை தகவல்

0 1933

வாட்ஸ் அப் மால்வேர் தாக்குதல் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களை திருட பாகிஸ்தான் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தேகத்திற்குரிய எண்ணில் இருந்து ராணுவ அதிகாரிகளின் வாட்ஸ் அப் செயலிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பக்க கோரி லிங்க் அனுப்பபடுவதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாட்ஸ் அப்பில் பகிரப்படும் லிங்கை அதிகாரிகள் தொட்டதும் ஜெர்மனி நியூரம்பெர்க்கில் உள்ள சர்வரில் இணைவதாகவும், அதன் மூலம் ராணுவ அதிகாரிகளின் தகவல்கள் திருடும் முயற்சி நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments