அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. கணக்கில் வராத ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கண்டுபிடிப்பு!

0 1690

அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஒப்பந்ததாரரர்கள் செய்யாத்துரை, சந்திரசேகர் ஆகியோர் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், பல்வேறு பொருட்களை வாங்கியதற்கு கணக்கு காட்ட போலி ரசீதுகளை பயன்படுத்தி இருப்பது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், போலி ரசீதுகள் மூலம் பல்வேறு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டிருப்பதும், அதன் கோப்புகளை மறைத்து வைக்க ரகசிய இடத்தை பயன்படுத்தி வந்ததும் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments