வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுத்த பெண் யுடியூபர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் யுடியூபர் அமலா அனு வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் புனலூர் வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததுமன்றி ஹெலிகேம் மூலம் வனப்பகுதி மற்றும் வன விலங்குகளை யுடியூபர் அமலா அனு வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்மீது அம்பானூர் வனத்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments