"பரிவர்த்தனைகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் கையாளுவார்" - வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம்..!

0 2437
"பரிவர்த்தனைகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் கையாளுவார்" - வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம்..!

அதிமுகவின் புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் இனி, கட்சியின் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளை கையாளுவார் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அதிமுகவின் கணக்குகள் உள்ள கரூர் வைஸ்சியா, இந்தியன் வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் இனி திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்டு வரவு செலவுகளை முறையாக கையாளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிமுகவின் பொருளாளர் தாம் தான் என்றும், தனக்கு தெரியாமல் வங்கி கணக்குகளை வேறு யாரும் கையாளக் கூடாது என கரூர் வைஸ்சியா வங்கிக்கு ஓபிஎஸ் தரப்பில் நேற்றே கடிதம் எழுதப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments