அதிமுக அலுவலக வன்முறை : 400க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு..!

0 1752
அதிமுக அலுவலக வன்முறை : 400க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு..!

அதிமுக அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேரும், இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர ஓபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் 22 பேர் மீதும், இபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் 20 பேர் மீதும் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் அளித்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments