எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை 2 ஆக குறைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.!

0 7449

தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில், சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை இரண்டாக குறைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும், ஏசி 3 டயர் பெட்டிகள் ஆறும், ஏசி 2 டயர் பெட்டிகள் இரண்டும், முன்பதிவில்லாத பெட்டிகள் ஐந்தும் இயக்கப்படுகின்றன. புதிய உத்தரவின்படி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் இரண்டாக குறைக்கப்பட்டு, ஏசி 3 டயர் பெட்டிகள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏசி 2 டயர் பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில்லா பெட்டிகள் மூன்றாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஏசி பர்ஸ்ட் கிளாஸ் பெட்டி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ரயில்வே போர்டின் இந்த உத்தரவால் எக்ஸ்பிரஸ் ரயில்களின் தற்போதுள்ள சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கை 780லிருந்து 156 ஆக குறைகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments