குஜராத் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - இதுவரை 60 பேர் உயிரிழப்பு..!

0 1023
குஜராத் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - இதுவரை 60 பேர் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனழை காரணமாக வால்சட் மாவட்டத்தில் உள்ள அவுரங்கா, அம்பிகா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்‍கு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அம்பிகா ஆற்றின் நடுவே பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 16 பேரை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

ஜூன் 1ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை, பெருவெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 11 ஆயிரம் பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments