போர்ச்சுகலில் 3,500 ஏக்கர் பரப்பில் தாவரங்களை கபளீகரம் செய்த காட்டுத் தீ.. உச்சகட்ட வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை..!

0 1655
போர்ச்சுகலில் 3,500 ஏக்கர் பரப்பில் தாவரங்களை கபளீகரம் செய்த காட்டுத் தீ.. உச்சகட்ட வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை..!

போர்ச்சுகலில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க ஆயிரத்து 500 வீரர்கள் போராடி வருகின்றனர்.

வடக்கு மற்றும் மத்திய போர்ச்சுகலை ஒட்டியுள்ள 250 இடங்களை காட்டுத் தீ கபளீகரம் செய்துள்ளது. 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான தாவர வகைகள் தீக்கிரையான நிலையில், தற்செயல் நிலை அறிவிக்கும் சூழலுக்கு அரசு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணங்களால் விரைவில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் வெப்ப அலை வீசக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments