நடப்பாண்டில் மட்டும் இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

0 1475

நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு நடப்பாண்டில் மட்டும் 3 புள்ளி 8 பில்லியன் டாலர் கடன் உதவி வழங்கியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கை கொண்டவர் என்றும் அதனடிப்படையில் இலங்கைக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலால் இந்தியாவுக்கு பாதுகாப்பு மற்றும் அகதிகள் அச்சுறுத்தல் இல்லை என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments