முதலமைச்சர் உத்தரவின் பேரில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நிதியுதவி..!

0 1924
முதலமைச்சர் உத்தரவின் பேரில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நிதியுதவி..!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று நிதி உதவி வழங்கினார்.

நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்து முருகன் - அனிதாசெல்வி தம்பதியினருக்கு சிவகுருநாதன் என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய் அனிதா செல்வி விபத்தில் உயிரிழந்த நிலையில், தந்தை முத்து முருகன் நோயினால் காலமானார்.

இந்நிலையில் பெற்றோரை இழந்து தவித்த இந்த குழந்தைகள் பற்றிய செய்தியை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்., உடனடியாக அவர்களுக்கு நிதி உதவி அளித்தும்., கல்விக்காக ஏற்பாடு செய்யவும், நிரந்தர வீடு கட்டிக் கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments