நாளை அதிமுக பொதுக்குழு - இ.பி.எஸ்,ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை.!

0 3947

சென்னை வானகரத்தில் நாளை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல், பன்னீர்செல்வமும் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், காலை 9 மணிக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments