முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பாயும் மாயார் ஆற்றில் வெள்ளபெருக்கு..!

0 1384
முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பாயும் மாயார் ஆற்றில் வெள்ளபெருக்கு..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாயார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தெப்பகாடு தற்காலிகப் பாலத்தை சூழ்ந்த தண்ணீரை வனத்துறையினர் வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

தொடர் மழையால் மாயார், பாண்டியாறு, பொன்னம்புழ ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாயார் ஆற்றில் பாயும் தண்ணீரால் தெப்பக்காடு - மசினகுடி நெடுஞ்சாலையை இணைக்கும் தற்காலிக பாலம் துண்டிக்கப்பட்டது.

அங்கு விரைந்த வனத்துறையினர், ராட்சத பைப்புகளில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments