டெல்லி ஜும்மா மசூதியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

0 1592
டெல்லி ஜும்மா மசூதியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

பக்ரீத் பெருநாளையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தியாக திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். நாடு முழுவதிலும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments