மருத்துவமனையில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 4 பேர் காயம் ; மருத்துவர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

0 890
மருத்துவமனையில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 4 பேர் காயம் ; மருத்துவர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை கத்தியால் குத்தி தாக்கியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த மருத்துவமனையில் 7வது மாடியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நபர் கத்தியால் 4 பேரை தாக்கியதோடு, சிலரை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். தகவலறிந்துச் சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை சரணடையச் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்த மருத்துவர்கள், நோயாளிகள் உட்பட பலர் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments