ஆக்கிரமைப்பை அகற்றிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீது தாக்குதல்

0 1404
ஆக்கிரமைப்பை அகற்றிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீது தாக்குதல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆக்கிரமைப்பை அகற்றிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பனெரி புதுக்குடி கிராமத்திற்கு உட்பட்ட பன்னீர்குளத்தை மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாக புகார் எழுந்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து முள்வேலைகளை அகற்றினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆல்பர்ட் மற்றும் பிரான்சிஸ் முள்வேலியை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிகாரிகளை தாக்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments