அமர்நாத்தில் திடீர் மேக வெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழை... பெருவெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

0 1582

ஜம்மு காஷ்மீரின் அமர்நாத்தில் திடீர் மேக வெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

அமர்நாத் குகைக்கோயில் அருகே நேற்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரை கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கிய 15 ஆயிரம் யாத்ரீகர்களை எம்ஐ 17 ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்டனர்.

பெருவெள்ளத்தில் சிக்கி 60 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 40 பேரை ரேடார்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments