சிமெண்ட் மூட்டை ஏற்றிய டிரக் பள்ளத்தில் விழுந்து விபத்து...மூட்டைகள் ஓட்டுனர் மீது விழுந்ததால் பரபரப்பு

0 1469

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றிய டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்  ஓட்டுனர் உயிர் தப்பினார். 

தும்பிபாடியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கருப்பூர் மேம்பாலம் அருகே வேகத்தடை இருப்பதை அறியாமல் முருகவேல் வேகமாக டிராக்டரை ஓட்டியதால் பிரேக் பழுதடைந்தது.

இதனை அடுத்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் டிராக்டர் அருகில் இருந்த  சுமார் 20அடி ஓடை பள்ளத்தில் தலை குப்புற விழுந்தது. அப்பொழுது கீழே விழுந்த ஓட்டுனர் முருகவேல் மீது சிமென்ட் மூட்டைகள் விழுந்து அப்படியே மூடியது.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிமெண்ட் மூட்டைகளை விரைந்து அகற்றி முருகவேலை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments