இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 4652

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மராட்டிய மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பயோ எத்தனாலை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம் என்றார். 

எத்தனால் மீது எடுக்கப்பட்ட முடிவால் ஆண்டுக்கு 20ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு மிச்சமானது என்றும் கூறினார்.  பச்சை ஹைட்ரஜன், எத்தனால், சிஎன்ஜி மூலம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் நிதின்கட்காரி  தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments