படகு பழுதாகி 2 நாட்களாக நடுக்கடலில் தவித்த புதுச்சேரி மீனவர்கள்.. பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்.!

0 1148

புதுச்சேரி அருகே நடுக்கடலில் படகு பழுதாகி 2 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர், படகையும் இழுத்து வந்து கரை சேர்த்தனர்.

கடந்த 5ம் தேதி தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற 9 மீனவர்கள் மரக்காணம் பகுதியில் கடலில் 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் மீனவர்கள் தவித்த நிலையில், மீனவர்கள் இருக்குமிடத்தை கண்டறிந்த இந்திய கடலோர காவல்படையினர் தங்களது ரோந்து படகில் மீனவர்களின் படகை கயிறு கட்டி இணைத்து, இழுத்து வந்து கரை சேர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments