ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்.. 9 பேர் உயிரிழப்பு!

0 1438

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் கார் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.

ராம்நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக தேலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற கார் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

தகவலறிந்து விரைந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, காருக்குள் இருந்த எஞ்சிய ஒருவரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஆற்றில் பாய்ந்த காரை டிராக்டர் உதவியுடன் மீட்கும் பணி  நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments