பிரபல இந்தி நடிகர் ராஜ்பாப்பருக்கு 2 ஆண்டு சிறை

0 1865

பிரபல இந்தி நடிகரும், அரசியல் பிரமுகருமான ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 1996-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ் பாப்பர் போட்டியிட்டார். அப்போது வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குசாவடி ஒன்றில் அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 26 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments