இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா..!

0 2115
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா..!

அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அந்நாட்டில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது விதிகளை மீறி போரிஸ், தனது அமைச்சர்களுடன் பார்டியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சொந்த கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதில், போரிஸ் ஜான்சன் வெற்றிப்பெற்றார்.

சில நாட்களுக்கு முன் கன்சர்வேடிவ் கட்சியின் துணை கொறடா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது குறித்த புகார்களை போரிஸ் முறையாக கையாளவில்லை எனக் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனை அடுத்து, போரிஸ் மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் உள்ளிட்ட 54 எம்.பி.க்கள் அடுத்ததடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments